உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த பிரசவ மரணங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது: ஐ.நா தகவல்

புதுடெல்லி: பிரசவ மரணத்தில் 2வது இடத்தில் இந்தியா இருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, ‘உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த பிரசவ மரணங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தாண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 52 பிரசவ மரணங்கள் என மொத்தம் 19,000 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த அறிக்கையானது உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், ஐநா மக்கள்தொகை நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெளியிட்டுள்ளன.

75,000 மரணங்களுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் 11,000 மரணங்களுடன் ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. ஐநா அமைப்புகளின் விவரங்களின்படி, அந்த ஆண்டு உலகளவில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2.6 லட்சம் பெண்கள் கர்ப்பம், பிரசவம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் நோய்களால் உயிரிழந்தனர். மேலும், சமீபத்தில் அமெரிக்காவின் மனிதாபிமான உதவி நிறுத்தப்பட்டதால், பல நாடுகளில் சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது’ என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

The post உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் நடந்த பிரசவ மரணங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது: ஐ.நா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: