ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய தூதரகம் மீது தாக்குதல்


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகம் முன்பு தாக்கப்பட்டது. இதுபற்றி இந்திய அரசு அங்குள்ள ஆஸ்திரேலிய அரசிடம் புகார் அளித்தது. இந்த சூழலில் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கான்பெராவில் உள்ள இந்திய உயர் தூதரகம் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளது. விக்டோரியா காவல்துறை இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

துணைத்தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பு உள்ள நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புகாரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தூதரக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: