நியூயார்க்கில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் பயணிகள் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். ஹட்சன் ஆற்றின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட 18 நிமிடங்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்தவரகள் லிபர்ட்டி சிலை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது இவ்விபத்து நடந்துள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தகவல் அளித்துள்ளார். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

The post நியூயார்க்கில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: