ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராமபட்டினம்புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் சினையாக ஒரு பசுமாடு நேற்று முன்தினம் ஒரு பெண் கன்று ஈன்றது. அதனைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடத்திலேயே மற்றொரு பெண் கன்றை ஈன்றது.
வழக்கமாக பசுமாடு ஒரு கன்று மட்டுமே ஈன்றும். ஆனால் மேற்கண்ட பசுமாடு இரண்டு கன்றுகுட்டிகளை ஈன்றுள்ளது. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர், பசுமாடு மற்றும் 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
The post 2 கன்றுகளை ஈன்ற பசு appeared first on Dinakaran.