கோயில் திருவிழாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் பூஜையை தவிர்க்க வேண்டும்; அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: கோயில்களில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் பூஜை என்று ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடத்த ஆதிதிராவிட்ச் சமுதாய மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பெரியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விழா அழைப்பிதழ்களிலும் சாதிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறநிலைய துறை தரப்பில், விழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயரை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில்களில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதினருக்கும் ஒரு நாள் என்று ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும். பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும். சாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

The post கோயில் திருவிழாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் பூஜையை தவிர்க்க வேண்டும்; அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: