அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சினேகா, கல்லூரிகள் சந்திக்கும் செலவுகளின் அடிப்படையில் மட்டுமே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் போது நடைமுறையில் உள்ள விலைவாசி மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.
மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் கட்டணங்கள் நிர்ணைப்பதை கட்டண நிர்ணயக் குழு உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து கட்ட நிர்ணய குழு முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மருத்துவ கல்லூரிகள் கட்டண நிர்ணயத்தை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.