ஒரே இடத்தில் எல்லாம் கிடைப்பது சிறப்பான திட்டம். ஒரு அரங்குக்கு சென்று அரைமணி நேரம் அங்கு இருந்து பேசினால் கல்லூரியை பற்றி முழு தகவல்களும் கிடைத்துவிடும். தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் மாணவர்கள் எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் மாணவர்கள் பெற்றோர் சொல்வதை படித்தனர். அதன்பின் ஆசிரியர்களின் யோசனைகளை கேட்டு செயல்பட்டனர். தற்போதைய இளம் தலைமுறையினர் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர் என 3 பேர் சேர்ந்து ஆலோசித்து முடிவு செய்கின்றனர். இங்கே உள்ள வாய்ப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துக்கொண்டு பெற்றோர் மற்றும் ஆசியர்களுடன் பேசியும், மாணவர்கள் தங்களின் திறனை வைத்தும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
விஐடியில் அனைத்து விதமான பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகிறது. விஐடியில் பொறியியல் தான் முதன்மை பாடமாக இருந்தாலும் தற்போது சட்டம், பேஷன், பொருளாதாரம் சார்ந்த படிப்புகள், உளவியல் சார்ந்த படிப்புகள் தற்போது அனைத்து நிறுவனங்களில் தேவை உள்ளது. அனைத்து விதமான பாடங்களை வழங்க நிதனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் மாணவர்கள் எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
The post தங்கள் திறனுக்கேற்ப பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேட்டி appeared first on Dinakaran.