பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

நெல்லை, டிச.5:நாளை டிச. 6ம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நேற்று இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் தண்டவாளங்களில் சோதனை மேற்கொண்டனர்.

The post பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: