இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும், ஸ்கூட்டர் மோதியதில் எருமை மாடும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்புரவு பணியாளர் மாறனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்த எருமை மாட்டையும் கைப்பற்றி எருமை மாட்டின் உரிமையாளர் யார்? திடீரென எங்கிருந்து ஓடி வந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மாமல்லபுரம் அருகே ஸ்கூட்டர் எருமை மாட்டின் மீது மோதிய விபத்தில் துப்புரவு பணியாளர் மற்றும் எருமை மாடு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மாமல்லபுரம் அருகே மாடு மீது ஸ்கூட்டர் மோதி துப்புரவு பணியாளர் பலி appeared first on Dinakaran.