இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து சாதனை படைத்த வீரர்களுக்கான வெற்றி கோப்பையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் வழங்கினார். அருகில், துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்ற வருடமும் மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்ட அணி 2ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கலெக்டரிடம் கோப்பையை வழங்கினார் appeared first on Dinakaran.