இதற்கு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த, கருத்தரங்கில், 50 சுயஉதவி குழு பிரதிநிதிகள் மற்றும் 50 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் போன்ற பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் குறித்த செயல்பாடுகளும், அரசின் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தெளிவும் இக்கருத்தரங்கின் கலந்து கொண்டவர்களிடேயே ஏற்பட்டு, இதன் மூலம் பொதுமக்களை சென்றடையும் என்பது இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். தொடர்ந்து விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை கலெக்டர் வெளியிட்டார்.
The post சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.