பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவோம், உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு ஆகியவற்றுடன் ஆரோக்கியத்தை காப்போம் உள்ளிட்ட பதாகைகளை சைக்கிளில் பொருத்தி சோத்துப்பாக்கம் பஜார் வீதி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சித்தர் பீடம் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சைக்கிளில் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அன்பு ராஜா, துணை முதல்வர்கள் கார்த்தி, அமுதா, உடற்கல்வி ஆசிரியர்கள் அஸ்வின், குணசேகர் உள்ளிட்ட என்சிசி, என்எஸ்எஸ், சாரண – சாரணியர், சாலை பாதுகாப்பு குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.