இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக 59 லட்சத்து 16 ஆயிரத்து 361 ரூபாயும், 163 கிராம் தங்கமும், 432 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் வசூலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டது.
The post காமாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ59.16 லட்சம் appeared first on Dinakaran.