இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், திமுக தலைமை கழக செய்யூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் இசை ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில்; 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் பூத் கமிட்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வரும் 28ம்தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும்.
மேலும், இந்த தொகுதியில் உள்ள குறைகளை தெரியப்படுத்துங்கள், அந்த குறைகளை தொகுதி பார்வையாளர் இசை பதிவு செய்து தலைமைக்கு தெரியப்படுத்தி விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்’ என்றார். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, ஒன்றிய துணை பெருந்தலைவர் சித்ரா ராஜேந்திரன், மீனவர் அணி அமைப்பாளர் பாரத், ஒன்றிய துணை செயலாளர் ஆயப்பாக்கம் பாஸ்கர், கல்பாக்கம் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், அப்துல் நபி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பாரதி பாபு, கே.டி.ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post செய்யூர் தொகுதி திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.