சிறுமியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம், அக்.24: பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். தம்பதியின், 16 வயதுடைய மகளிடம் காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம், திரவுபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவானந்தம் மகன் குலசேகரன் (எ) கிஷோர் (26), வெங்கட் (24), ஒலிமுகமதுபேட்டை சிவிஎம் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரித்தீஷ் (21) ஆகிய 3 பேரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.நாளடைவில், 3 பேரும் ஒன்றாக சேர்ந்து சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததில் அவர் கர்ப்பமாகி உள்ளார். இதனையறிந்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமியிடம் நண்பர்களாக பழகி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததது தெரியவந்தது. தொடர்ந்து குற்றவாளிகளான குலசேகரன் (எ) கிஷோர், ரித்தீஷ் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான வெங்கட் என்பவரை தேடி வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: