இந்நிலையில் நேற்றிரவு சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஹாசன் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருந்த சூரஜ் ரேவண்ணாவின் அண்ணன் பிரஜ்வால் ரேவண்ணா மீது பல பெண்கள் பாலியல் பலாத்கார புகார்கள் கூறினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த மே 31ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அதேபோல் சூரஜின் தாயார் பவானி ரேவண்ணா மீதும் பாலியல் மற்றும் கடத்தல் வழக்கு பதியப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார். தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினார்.
The post பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தம்பி அதிரடி கைது: கர்நாடக போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.