அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் ஷிவ்ரி – நவ சேவா அடல் பாலம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையையும் இது பெற்றது. இந்தப் பாலத்தை தினமும் சுமார் 70,000 வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கி உள்ளது. முதல் மழைக்கே அடல் சேது கடல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலம் திறந்து வைக்கப்பட்டு 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் விரிசல் ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலத்தில் காணப்பட்ட விரிசல் தொடர்பான படங்கள் இணையதளங்களில் வைரலாகின. அகோலா மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்ததும், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, விரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். தரமற்ற கட்டுமானமே பாலத்தில் விரிசல் ஏற்பட காரணம் என்று அவர் தெரிவித்தார்.
The post தரமற்ற கட்டுமானத்தால் ரூ.17,840 கோடியில் கட்டப்பட்ட மும்பை கடல் பாலத்தில் விரிசல்: பிரதமர் திறந்து வைத்து 5 மாதங்களிலேயே சேதம் appeared first on Dinakaran.