இந்த முறையிலான ஒதுக்கீட்டின் மூலம் ₹2000 கோடிக்கு மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவை மாற்றியது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்து உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்’’ என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது.குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல்,‘‘பல்வேறு தொழில் துறை அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. சைக்காவில் ஒரு பிளாட்டு கூட ஒதுக்கப்படவில்லை. பிளாட்டுகள் ஒதுக்கீட்டை கமிட்டி தான் தீர்மானிக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றார்.
The post குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம் ஒதுக்கீட்டில் பாஜ அரசு மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.