அப்போது அருகில் நின்ற ஆட்டோ மீது விழுந்ததால் அந்த ஆட்டோ சேதமானது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும் அந்த வழியாக சென்ற கேபிள் டிவி ஓயர், மின் கம்பிகளிலும் பேனர் விழுந்ததால் மின்கம்பிகள் சாலையில் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற வாகனங்களும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பேனர் கீழே விழுந்ததை பாஜவினர் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி எடுத்து சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனர் சரிந்து டிரைவர் காயம் appeared first on Dinakaran.