வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம்

 

சென்னை: சென்னை மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் தென்னக அமைப்பு இணைந்து ஆணையர் திரிபுரசுந்தரி மற்றும் இணை ஆணையர் அர்ஜூன் மாணிக் அறிவுரையின் அடிப்படையில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்த கருத்தரங்கம் சென்னையில் உள்ள தனியார் விடுதி நேற்று நடந்தது. கருத்தரங்கத்தை இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் இணை இயக்குனர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். வருமான வரி அதிகாரி துணை ஆணையர் இளங்கோ, வருமானவரி சட்டத்தில் உள்ள டிடிஸ்,டிசஸ் விதிகளில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்கள் சட்ட குறித்து விளக்கினார். மேலும் ராஜாராமன் மற்றும் ஸ்ரீதர் வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரி பிடித்தம் மற்றும் வரிவசூல் குறித்த விதிகளின் சாராம்சம், விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கினர்.

The post வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: