ஆர்டிஇ: தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: ஆர்டிஇ மூலம் தனியார் பள்ளியில் சேரும் மாணவர் சீருடைக்கான கட்டணம் தர வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சீருடை, பாடப்புத்தகத்துக்கான கட்டணத்தையும் தர வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post ஆர்டிஇ: தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Related Stories: