அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எந்தவித பதவியும் வகிக்காத காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பங்கேற்றிருக்கிறார் என்றால் கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை டெல்லியில் இருந்து காந்தி குடும்பம் தான் இயக்கிவருகிறது என்று பாஜ குற்றம்சாட்டியது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் சித்தராமையா ஆட்சி நடக்கிறதா அல்லது 10, ஜன்பத் சாலை, புதுடெல்லி ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜ சார்பில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளித்துள்ள முதல்வர் சித்தராமையா, ‘பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து மாநகர எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவர் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ளவில்லை. அந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.
The post கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர்: ஆளுநரிடம் பாஜ புகார் appeared first on Dinakaran.