தஞ்சாவூர், பிப்.11: தஞ்சையில் 1981ம் ஆண்டு காவலர் குழுமம் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
குழுமத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். வழிகாட்டு செயல் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜராஜன் வரவேற்றார். செயலாளர் குழு அட்மின் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜகுரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு ஊர்க்காவல் படை சரக துணை தளபதி முஹம்மது இர்ஷாத் வாழ்த்தி பேசினார். இதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர்.மோகன் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
