புதுக்கோட்டை, பிப். 11: புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி முன்பு அக்கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுஜிசிஅறிவுறுத்தி உள்ளதை போல கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,800 ரூபாய் வழங்க வேண்டும். 12 மாதம் ஊதியம் என்பது முன்பு உறுப்புக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்க சாத்தியமாகும் போது அதை அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் வழங்க வேண்டும். பிஎஃப் மற்றும் இஎஃப் உறுப்புக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு பிடிக்கப்பட்டது.
