திருத்துறைப்பூண்டி,பிப்.11: திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோயில்களின் சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நடைபெற்றது. இதையொட்டி திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் சுவாமி கோயிலில் (பெரிய கோயில்) மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் மற்றும் கோவில் செயல் அலுவலர் முருகையன் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
