ஜெயங்கொண்டம், பிப்.11: அரியலூர் மாவட்டம் திருமானூர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து வேளாண்கல்லூரி மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பசுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள் கௌசல்யா, தனலெட்சுமி, தில்ஷா, தேஜஸ்வினி, ஹரிணி, இளவரசி, பவ்மிதா, தனுஷியா, ஞானாம்பிகை ஆகிய மாணவிகள் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுதல், நீர்ப்பாசனப் பயிற்சிகளுடன் சேர்ந்து, மரங்களின் நீண்ட கால நன்மைகள், நிழல், மண்ணைக் காக்குதல், உயிரின பல்வகை மையம் மற்றும் வேளாண் பாடங்களுக்கான ஒரே சமூகம் வகுப்பறை ஆகியவற்றை பற்றிய பயிற்சிகளை வழங்கினர்
