தா.பழூர், பிப்.11: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் நடுவர்களுக்கான கருத்தரங்கம் அடுத்த மாதம் 1ம் தேதி ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான நடுவர் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 9976999557 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம். இந்த படிவத்தை பிப்ரவரி 15ம்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் குணாளன் தெரிவித்துள்ளார்.
