திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜாவை திருச்சி விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். போலி ஆவணங்கள் மூலம் தயாரித்த பாஸ்போர்ட்டை வைத்து சிங்கப்பூர் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.