மேலும், முதல்வர் உத்தரவின்பேரில் இந்த வழக்கை எஸ்பி தலைமையிலான 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், சுசரிதா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகளான தேவரகொண்டா விஜய், தேவரகொண்டா காந்த் மற்றும் அவர்களது கூட்டாளியான கரங்கி மகேஷ் ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை தேடி வந்த போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விஜய், காந்த், கரங்கி மகேஷ் ஆகிய 3 பேரும், சம்பவம் நடந்த இடத்தில் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற சுசரிதாவை கடத்திசென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கொலை செய்து முள்புதரில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைதான 3பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் 3 ரவுடிகள் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கஞ்சா போதையில் அட்டூழியம் இளம்பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை: 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.