இதை தொடர்ந்து, இந்த சம்பம் குறித்து ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், விபத்துக்குள்ளான இருவரும் மதுபோதையில் பைக் ஓட்டி வந்தனர் என்பது தெரியவந்தது. இவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (24) மற்றும் காராமணி மேட்டைச் சேர்ந்த சந்துரு (25) ஆகியோர் ஆவர். இதில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சந்துரு கவலைக்கிடமான நிலையில் அவசர பிரிவிலும், புருஷோத்தமன் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாகத்தி மற்றும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
எதற்காக இவர்கள் பட்டாகத்தியுடன் வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்தபோது அங்கிருந்த மக்கள் தங்கள் செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post கும்மிடிப்பூண்டி அருகே பட்டா கத்தியுடன் வந்து விபத்துக்குள்ளான வாலிபர்கள்: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.