இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

கும்மிடிப்பூண்டி: தேர்வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழியில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய போது இளைஞர் தீக்குளித்தார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஒ. பாக்கிய ஷர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது தீக்குளித்த ராஜ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: