அவரது ஆலோசனையின் பேரில், ராகினியை கொன்றுவிட முடிவு செய்தனர். அதற்காக ராகினியை அவர்களது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி அழைத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு காரில் ராகினியை கடத்திச் சென்றனர். ஹிண்டன் ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ராகினியை சுட்டுக் கொன்று, சடலத்தை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசிவிட்டு தப்பினர். ராகினியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது நடந்த சம்பவங்கள் அம்பலமானது. இது தொடர்பாக ராக்கி, அவரது சகோதரர் அமித், அவரது நண்பர்கள் கரண், அங்கூர் உள்ளிட்ட 5 பேர் கைது ெசய்யப்பட்டனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராக்கியின் கணவர் பண்ட்டியையும் போலீசார் கைது செய்தனர்.
The post கணவரின் காதலியை சுட்டுக் கொன்ற மனைவி; பாலத்தில் இருந்து சடலத்தை வீசினார் appeared first on Dinakaran.