கடவூர். டிச.3: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரகம்பட்டி கடைவீதியில் நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். பொருளாளர் ராமமூர்த்தி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.