புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்

வேலாயுதம்பாளையம், ஏப்.24: கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புகழிமலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வரிசையாக ஊர்வலமாக வந்தனர். ஆறுநாட்டார் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் வீற்றிருக்கும் அருள்நிறை மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான் ,அருள்நிறை சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி போற்றி பாடல் பாடிக் கொண்டே புகழிமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

The post புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.

Related Stories: