அரவக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த காளைமாடு மீட்பு

அரவக்குறிச்சி, ஏப். 23: அரவக்குறிச்சி அருகே குப்ப மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள நீர் நிரம்பிய கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளை மாட்டை அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

அரவக்குறிச்சி அருகில் குப்ப மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள நீர் நிரம்பிய கிணற்றில் காளை மாடு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பாதாக தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம் சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குழுவினருடன் விரைந்து சென்று காளை மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளர் சங்கரப்பனிடம் ஒப்படைத்தனர்.

The post அரவக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த காளைமாடு மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: