மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால சிறப்பு பயிற்சிகள்

கரூர், ஏப். 26: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாணவ,மாணவிகளுக்கு இலவச கூடைப்பந்து பயிற்சி பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கரூர் மாவட்டம் கூடைப்பந்தத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கூடைப்பந்து விளையாட்டில் விருப்பமுள்ள மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து மாநிலம் மட்டும் தேசிய அலுவலகம் போட்டிக்கு தயார் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட கோடை பந்து கழகம் சார்பில் இவ்வாண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கூடைப்பந்து பயிற்சி வகுப்புகள் கரூர் திருவள்ளூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த பகுதி வகுப்புகளை கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் அப்னா தனபதி தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் கரூரில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

The post மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால சிறப்பு பயிற்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: