க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்

 

க.பரமத்தி, ஏப். 21: க.பரமத்தி பகுதியில் இருந்து நொய்யல் செல்லும் சாலையில் க.பரமத்தி மயான பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாய நிலையால் பலரும் அச்சமடைந்துள்ளனர். இனியாவது நெடுஞ்சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். க.பரமத்தி கடைவீதியில் இருந்து நொய்யல் செல்லும் தார் சாலையில் க.பரமத்தி மயான பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகி விட்டது.இதன் வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது.

இப்பகுதியில் இருந்து முன்னூர், குப்பம், அத்திப்பாளையம், கொடுமுடி, ஈரோடு, நாமக்கல் போன் பகுதிக்கு தினமும் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று திரும்பவும் வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விவசாயிகள், விவசாய விளை பொருட்களை இந்த வழியாகத்தான் உள்ளூர் வெளியூர் சந்தைகளுக்கு டூவீலரில் வைத்து கொண்டு விவசாயிகள் சென்று ஊருக்கு திரும்புகின்றனர். இவ்வாறு மக்கள் ஏராளமானோர் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

The post க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள் appeared first on Dinakaran.

Related Stories: