திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூர், பிப். 18: திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் பகுதிகளில் இன்று (18ம் தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.   இதுகுறித்து திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் பொன் கருப்பசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சங்கிவிளை பீடரில் அவசரகால பராமரிப்பு பணி இன்று (18ம் தேதி) நடக்கிறது.  இதன் காரணமாக திருச்செந்தூர் துணை மின் நிலையத்தைச் சார்ந்த, திருச்செந்தூர் பிரசாத்நகர், வீரபாண்டியன்பட்டினம், ஜெ.ஜெ.நகர், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், வேளாங்கண்ணி மாதா கோயில் தெரு, பாத்திமாநகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: