புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு

செய்துங்கநல்லூர், ஏப்.20: செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாக்கினை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகை தந்தார். காரில் கருப்பு நிற சட்டை வெள்ளை நிற வேஷ்டி அணிந்து கருப்பு நிற கண்ணாடி அணிந்து புளியங்குளம் வாக்குச்சாவடி மையத்திற்குள் வந்தார். அவருடன் அவரது தந்தையும் வாக்கு செலுத்த வருகை தந்தார். இருவரும் வாக்களித்தனர். அதன் பின்னர் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில், ‘இன்று மிகவும் முக்கியமான நாள். யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு நம்மிடம் உள்ள ஒரே நாள் இது தான். அதனால் எனது சொந்த ஊரான புளியங்குளத்தில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். வாழைப்படத்தின் இறுதி கட்டப்பணி நடந்து வருகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த படம் நடிகர் துருவிக்ரமை வைத்து இயக்க உள்ளேன்’ என்றார்.

The post புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: