பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் அசன விழா

நாசரேத்,ஏப்.27: பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் நடந்த அசன விழாவில் திரளானோர் பங்கேற்றனர். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் கச்சனாவிளை பரி.மாற்கு ஆலய 84 வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், சபை ஊழியர் செல்வசிங் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

The post பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் அசன விழா appeared first on Dinakaran.

Related Stories: