ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில் ஆறுமுகநேரி பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம்

ஆறுமுகநேரி, ஏப்.27: ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். திருச்செந்தூரை சேர்ந்தவர் ரவி கார்த்திகேயன். இவர், ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் 12ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது அதே பள்ளியின் அகாடமியில் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) 2வது சீசன் நுழைவு தேர்வில் 99.51 சதவீதம் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். மாணவர் ரவி கார்த்திகேயனை பள்ளியின் சேர்மன் சுப்பையா, பெர்ல்ஸ் அகாடமி இயக்குனர் மபத்லால் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் இப்பள்ளியில் முதல் சீசன் ஐஐடி நுழைவு தேர்வில் காயல்பட்டினத்தை சேர்ந்த செய்யது அகமது மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றிருந்தார். தற்போது 2வது சீசன் தேர்வில் அதே பள்ளியில் பயின்று வரும் திருச்செந்தூரை சேர்ந்த ரவி கார்த்திகேயன் முதலிடம் பெற்றுள்ளார்.

The post ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில் ஆறுமுகநேரி பள்ளி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: