தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா

உடன்குடி, ஏப். 25: உடன்குடி தேரியூர் ஆண்டிவிளை தேவி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பூக்குழி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 22ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, 508 திருவிளக்கு பூஜை, நலத்திட்ட உதவிகள் வழங்கல், சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மறுநாள் 23ம் தேதி பகல், இரவில் சிறப்பு அன்னதானம், அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு பூக்குழி இறங்குதல் வைபவம் ஆகியவை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் அதிமுக நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் அமிர்தாமகேந்திரன், ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: