தருவைக்குளத்தில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் துவக்கம்

குளத்தூர், ஏப்.26: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த தருவைகுளத்தில் தூயமிக்கேல் கைப்பந்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்துடன் இணைந்து தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான பத்தாவது ஆண்டு கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் துவங்கியது. தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட் பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்து பேசினார். அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ராபின் ஞானப்பிரகாசம், மிக்கேல் கைப்பந்து கழக தலைவர் சதீஷ்சந்திரன், பயிற்சி முகாம் பயிற்சியாளர்கள் பாக்கியராஜ், ஸ்னோசன், ஜோசப், ஞானம், நீக்குலாஸ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும், கைப்பந்து கழக செயலாளருமான ரவிகாந்த் செய்து வருகிறார்.

The post தருவைக்குளத்தில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: