ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்

ஓட்டப்பிடாரம், ஏப். 23: ஓட்டப்பிடாரம் யூனியன் முப்புலிவெட்டி கிராமத்தில் உச்சினி மாகாளிம்மன் கோயில் பகுதி அருகில் யூனியன் பொது நிதியில் இருந்து ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜகனி, ஊர் தலைவர் முத்துவேல், சிஐடியு துறைமுக சங்க செயலாளர் நாகராஜன், ஓய்வுபெற்ற ஆசிரியர் கணேசன், மாவட்ட திமுக பிரதிநிதி ஜோசப் மோகன் மற்றும் கிராம நலக் குழுவினர் கலந்து கொண்டனர்.

The post ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: