திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கயத்தாறு,ஏப்.27: கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரம் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு நேற்று அதிகாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7 மணி முதல் வேத விற்பனர்களின் வேதங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு காலை 9.30 மணியளவில் கோயில் கோபுரத்தில் அமைந்துள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நூற்றுக்கணக்கான பக்தர்களின் கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, உடற்கல்வி ஆசிரியர் சுப்பாராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

The post திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: