வாலிபர் மாயம்

சாத்தான்குளம், ஜன.23: சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் பொன்னுலிங்கம் மகன் சந்திரசேகர்(30). இவர் திசையன் விளையில் தனியார் மினிபஸ்சில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.

இவரும் ஜெனிட்டா(24) என்பவரும் கடந்த சில ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற சந்திரசேகர் பின்னர் வீடு திரும்பவில்லை. வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ஜெனிட்டா, தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்கு பதிந்து சந்திரசேகர் எங்கு உள்ளார்? அவரை யாரும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: