ரயில் மோதி முதியவர் பலி

தூத்துக்குடி, ஜன.21: தூத்துக்குடி ரயில்நிலையத்தில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ், நேற்று மாலை முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது. அப்போது 2வது ரயில்வே கேட் பகுதியில் முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த முதியவர் தூத்துக்குடி சேதுராஜா தெருவை சேர்ந்த சோமசுந்தரம் (70) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: