கடையத்தில் பேருந்து கால அட்டவணை திறப்பு

கடையம், டிச. 31: கடையம் பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை நேற்று திறந்து வைக்கப்பட்டது.கடையம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கடையம் நலச்சங்கம் மற்றும் கடையம் அரிமா சங்கம் இணைந்து பேருந்து கால அட்டவணை அமைத்தனர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முருகையா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, திறந்து வைத்தார். கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பழனிவேல் முன்னிலை வகித்தார். கடையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  மூலநாதன், தெற்கு கடையம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் கடையம் அரிமா சங்கத் தலைவர் குமரேசன், நிர்வாகிகள் அருணாசலம், பால்சிங், கடையம் நலச்சங்கச் செயலர் கோபால், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், தெற்கு கடையம் ஊராட்சி செயலர் பழனி, கடையம் நலச்சங்க செயற்குழு உறுப்பினர்கள், நடத்துநர் கோமு, இசக்கிராஜா, பூக்கடை கோமு, ராஜலிங்கம், ரமேஷ் மற்ம் பேருந்து நிலைய வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடையம் நலச்சங்கத் தலைவர் கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார். அரிமா சங்க நிர்வாகி முருகன் நன்றி கூறினார்.

Related Stories: