கருங்கல், டிச. 30: கருங்கல் கட்டிட தொழிலாளி அலெக்சாண்டர் கொலை தொடர்பாக அவரது நண்பரை பிடித்து, நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கருங்கல் அருகே சகாயநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (48). வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார். விடுமுறையில் கடந்த 5 மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயாவுடன் பைக்கில் வெளியே சென்றார். பின்னர் இரவு அவரை வீட்டில் விட்டு விட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டார். இந்த நிலையில் புங்கைகுளம்கரை பகுதியில் வைத்து ஒரு கும்பல், அலெக்சாண்டர் மீது மிளகாய்பொடி தூவியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.