கழுகுமலை, டிச. 27: கழுகுமலை அருகே பழங்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த நடராஜன் (64). இவர், மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் பாலாஜிக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால், அதற்கு சிகிச்சை எடுக்க கடந்த 20ம் தேதி கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பாக அவரது தாய் மாரியம்மாள்(55) உடனிருந்தார்.அப்போது மாரியம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதித்துள்ளது. இதனால் அங்கேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாரியம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.